Our Feeds


Saturday, November 25, 2023

News Editor

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது


 சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆஸ்திரியாவுக்குச் செல்ல முற்பட்டபோதே சந்தேக நபர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 27 வயதுகளையுடைய கிளிநொச்சி மற்றும் முல்லேரியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், இருவரும் பொரளையில் உள்ள தரகர் மூலம் பெறப்பட்ட போலி விசா ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »