பாலஸ்தீன் மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் வெள்ளிக்கிழமை (03) பகல் 1.00 மணியளவில் கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
கிண்ணியா சூரா அமைப்புடன் பல சமூக நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கண்டன எழுச்சி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பாலஸ்தீன் மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.