பாதுக்க பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற 28 வயதுடைய நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அப்பிரதேச ஆலயம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றியவராவார்.
உள்ளூர் கோவிலின் ஊர்வலம் வீட்டின் முன்புறம் செல்வதால், அதற்காக வீதி மின்விளக்கை பொருத்த சென்ற போதே அவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.