ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு
முன்னர் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மாலைதீவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் சென்றுள்ளார்.
மாலைதீவு குடியரசு சதுக்கத்தில் நாளை 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், இவ்விழாவில் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.