Our Feeds


Friday, November 17, 2023

News Editor

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவை



மண்சரிவால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் பாறை சரிந்து விழுந்ததில் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

 


பதுளைக்கு செல்லும் இரவு நேர தபால் ரயில் தியத்தலாவ ரயில் நிலையத்தை நெருங்கும் போது அருகில் உள்ள மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் மார்க்கம் தடைபட்டது, ஆனால் சாரதி இயந்திரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் ரயிலை நிறுத்தினார்.

 


ரயில்வே பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் தடைகளை நீக்கி ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »