Our Feeds


Friday, November 3, 2023

News Editor

வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

 


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

 


அரசாங்கத்திடம் இருந்த கிடைத்த சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

 


வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


சுகாதார அமைப்பின் வீழ்ச்சியைத் தணிக்க, நாட்டில் வைத்தியர்களை தக்கவைக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாகாண மட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »