Our Feeds


Tuesday, November 14, 2023

News Editor

இயந்திர கோளாறால் பல ரயில் சேவைகள் பாதிப்பு


 நாட்டில் இன்று காலை முதல் இயந்திர கோளாறு காரணமாக பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, இன்று காலை களுத்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


அத்துடன், இயந்திர கோளாறு காரணமாக சிலாபத்தில் இருந்து பாணந்துறை வரை பயணிக்கும் ரயில்  கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


அதேநேரம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.40க்கு பெலியத்த நோக்கி புறப்படவிருந்த ரயில் சேவையும் தாமதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »