சவூதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் அலி இப்ராஹிம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (27) இடம்பெற்றது.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் ,இடையில் ஆடை மற்றும் சுற்றுலாத் துறை குறித்தும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் சவூதி அரேபிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், பிராந்திய பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கைக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் சவுதி அரேபிய அமைச்சர் தெரிவித்தார்