பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான அவதூறான கருத்துக்களை வெளியிட்டதையடுத்து, போதகர் நீதிமன்றத்தால் கைது செய்ய, இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்டது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) காலை 01.32 மணிக்கு டோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், கட்டண “கோல்ட் ரூட்” சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.
இந்த போதகருடன் மேலும் இருவர் வந்துள்ளனர்.