முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடகவியலாளர் ரம்சி ராசிக்கின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவரை கைது செய்த அதிகாரிகள் மற்றும் சிஐடி பணிப்பாளரின் தனிப்பட்ட பணத்தில் இருந்து ரம்சிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது கைதும் தடுத்துவைப்பும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக ரம்சி தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.