சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுவின் தலைவருமான சஞ்சீவ குமார சமரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் சகா என கூறப்படும் ஒருவர் சார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது இரகசிய பொலிஸாரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கணேமுல்ல சஞசீவவின் குழுவின் பிரதான துப்பாக்கிதாரி என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.