தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று (17) பிற்பகல் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எல்டோஸ் மேத்யூவும் கலந்துகொண்டார். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.