Our Feeds


Saturday, November 25, 2023

News Editor

ஸ்ரீ ரங்காவுக்கு பிணை


 வவுனியா-செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


 பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கைது செய்யப்பட்ட அவர் கடந்த எட்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்குவாதாக வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »