யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் இருந்து ஒருவரின் சடலம் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்.
இளைஞனின் வீடு அருகில் உள்ளதால், தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில், நேற்று உணவருந்த இளைஞன் வராததால், வீட்டார் இளைஞனை தேடி சென்ற போது, பூட்டிய வீட்டினுள் படுக்கையில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.