முச்சக்கரவண்டி ஒன்றில் தவறவிடப்பட்டிருந்த 92,000 ரூபா பணத்துடனான பையைக் கண்டெடுத்து அதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
பணப்பையைக் கண்டெடுத்த பெண் அதனை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் பணப்பையின் உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியான நேரத்தில் இவ்வாறான ஒரு நல்ல செயலை செய்தமைக்காக குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது நன்றிகளை தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.