மத்தள விமான நிலையத்தில் விமானங்களை திருத்துவதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் லலித் எல்லாவல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விமான நிலையம் நஷ்டம் அடைவது உண்மைதான். விமான நிலையத்தை லாபகரமாக மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையத்தில் இருநூறு கோடி நஷ்டம். நூறு கோடியாக நஷ்டம் குறைந்துள்ளது. தற்போது அதிகளவில் விமானங்கள் தரையிறங்குகின்றன என்றார்.