Our Feeds


Saturday, November 4, 2023

News Editor

சீரற்ற வானிலையால் ஆறாயிரத்து 723 பேர் பாதிப்பு


 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தென்மாகாணத்தில் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »