Our Feeds


Sunday, November 5, 2023

SHAHNI RAMEES

ஹரக்கட்டா எனக்கு 700 மில்லியன் வழங்க முன்வந்தார் - டிரான் அலஸ்..

 



இலங்கைக்கு தான் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக

ஹரக்கட்டா தனக்கு 700 மில்லியன் வழங்க முன்வந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்


காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்காக சிரேஸ்ட அதிகாரிகளிற்கு பெருந்தொகை பணத்தை வழங்க  பாதாளஉலக குழுவினர் தயாராகவுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிக்கு இந்த விடயம் தெரியும் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்தவர் கொல்லப்பட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதாளஉலக குழுவினருக்கு உதவுவதன் காரணமாகவே குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »