கிழக்கு மாகாணத்தில் தரம் 3 ஐ நிறைவு செய்த 499 அதிபர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானனால் நேற்று திங்கட்கிழமை (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அத்துகோரல,வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா,பிரதம செயலாளர் R.M.K.S ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.