Our Feeds


Saturday, November 25, 2023

News Editor

3வது மின்பிறப்பாக்கி விரைவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும்


 பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்க செய்யப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இயந்திரக்கோளாறினால் செயலிழக்க செய்யப்பட்ட நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியை அடுத்த மாதம் 16 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான இயலுமை காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »