Our Feeds


Friday, November 24, 2023

News Editor

இலங்கை கிரிக்கெட் விவகாரம்; 27 ஆம் திகதி முடிவு?


 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழு தொடர்பான வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால குழுவை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்தார்.

அவரது தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »