Our Feeds


Thursday, November 16, 2023

SHAHNI RAMEES

2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை

 

இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை நாளை (17) பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்.

 

2018 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தாதியர் மாணவர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2519 தாதியர்களுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

 

தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 இற்கும் அதிகமான தாதியர்கள் பணிபுரிகின்றனர்.

 

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45,000 தாண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »