Our Feeds


Monday, November 13, 2023

SHAHNI RAMEES

2024 பட்ஜெட் - அரசாங்கத்தின் முன்மொழிவுகள்...! PART 01

 



2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி

ரணில் சபையில் முன்வைத்தார்.



*வரவுக்கேற்ற செலவை கடந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை .இலவச நிவாரணங்கள் , அதிகப்படியான , சம்பளம் , தேவையற்ற செலவுகள்காரணமாக நாங்கள் உலகில் கடன்பட்டோம். வங்குரோத்தானோம்.- ரணில் 



*பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களுடன் மக்களும் ஒத்துழைத்தார்.தடம்புரண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பினோம்.நீண்டகால திட்டங்களை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.அரசியல் இலாபம் கருதி மட்டும் செய்யப்படும் வேலைகள் வெற்றியளிக்காது.அதுவே வரலாறு கற்றுத்தந்த பாடம்.அரசியல் தேவைகளுக்காக பொய் கூறவேண்டாம். - ரணில் 



 * பொருளாதார பிரச்சினைகளுக்கேற்ற ஊதியம் இல்லை.மின்சார , வர்த்தக , உற்பத்தி துறைகளில் நெருக்கடி உள்ளது.இந்த பயணம் சிரமம் என்றாலும் அதில் செல்லவேண்டியுள்ளது. - ரணில் 



* சம்பள அதிகரிப்பினை கண்டபடி செய்ய முடியாது .அரச வருமானத்தை அதிகரித்தால் மட்டும் செய்யலாம்.கடன் வாங்கியோ அல்லது பணத்தை அச்சிட்டோ நாங்கள் அதனை செய்தால் பொருளாதாரம் மேலும் மோசமடையும் - ரணில் 



*கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது . நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது. துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை - ரணில் 




**அரச வரிவருமானம் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை .அதனை அதிகரிக்க வேண்டும்.வரி அறவீட்டை மறுசீரமைக்க வேண்டும். அரச வருமானம் அதிகரித்தால் வரி நிவாரணம் வழங்கலாம் - ரணில்



 * மக்களின் பணத்தை திருடியவர்கள் மட்டுமல்ல நாட்டின் எதிர்காலத்தை திருடியவர்களையும் கண்காணிக்க வேண்டும். திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி , நுவரெலியா தபால் நிலைய கட்டிட விவகாரம் என்பன எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்கானவை. ஆனால் அவற்றை தடுப்பது அநீதி. அரச வளங்களை காக்கவேண்டும்.ஆனால் அவை பயனுள்ளதாக்கப்படவேண்டும். - ரணில் 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »