Our Feeds


Sunday, November 5, 2023

SHAHNI RAMEES

15 மாடுகளைத் திருடிய மூன்று சந்தேக நபர்கள் கைது...!

 



 காரைநகர் சிவன் கோவில் மைதானத்தில் 15 மாடுகள் மற்றும் இரண்டு தண்ணீர் தொட்டிகளை திருடிய மூன்று சந்தேக நபர்களை காரைநகர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

திருடப்பட்ட மாடுகளின் பெறுமதி 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த சந்தேக நபர்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி இரவு லொறியில் வைத்து தொட்டிகளையும், கோவில் மைதானத்தில் இருந்து கால்நடைகளையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »