ஊவா பரணகம கலஹாகம பிரதேசத்தில் வசிக்கும் பதினான்கு குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்திரண்டு பேர் மண்சரிவு அபாயம் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக வசிப்பிடங்களிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக ஊவா பரணகம பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்பட்ட 8 குடும்பங்களில் 27 பேர் அலுவல பள்ளிவாசலிலும், 07 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் கலஹாகம விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எல்ல பிரதேச செயலகப் பிரிவின் உடுவார பிரதேசத்தில் உள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடும் மழையுடன் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இந்த வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.