Our Feeds


Wednesday, November 22, 2023

News Editor

10 ஆம் தரத்தில் சாதாரண தர பரீட்சை – கல்வி அமைச்சர்


 10 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

 

இன்று பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அத்தோடு,4 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »