ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா பாராளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து பாராளுமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை தாக்கவில்லையென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபையில் சற்று முன் உரையாற்றிய அவர் , இராஜாங்க அமைச்சர் டயானா அநாகரீகமாக நடந்துகொள்ள முற்பட்டதாக சாடினார்.