Our Feeds


Monday, October 30, 2023

News Editor

Update :- மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளி - 48 பேர் உயிரிழப்பு


 வட அமெரிக்க நாடான மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 36 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளன.


மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் 'ஓடிஸ்' சூறாவளி சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. அப்போது அடித்த பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 


சுமார் 273,000 வீடுகள், 600 உணவகங்கள் மற்றும் 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வணிக வளாகங்கள் இடிந்துள்ளன என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »