அமெரிக்காவின் லூயிஸ்டன் மைனே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த பகுதியில் ஆயுதம் ஏந்திய ஒருவர் திடீரென துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் வெளியிட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் தலைமறைவாகியுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.