Our Feeds


Thursday, October 12, 2023

News Editor

STF துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு


 மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாதால உலக குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

தெற்கில் இடம்பெற்ற பல குற்றங்களுடன், இவர் தொடர்புடைய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்ளனர்,

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »