இலங்கையில் எரிபொருள் QR முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.
QR முறையையோ அல்லது எரிபொருளுக்கான எந்தவொரு கோட்டா முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார்.