Our Feeds


Friday, October 27, 2023

Anonymous

PHOTOS: யுத்தத்தை உடன் நிறுத்து | பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கல்முனை மக்கள் ஒன்றாக திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்.

 



பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ்  மக்களின் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27)  கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இடம் பெற்றது.

பலஸ்தீன மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் பல நாட்களாக இடம் பெற்று வருகின்ற நிலையில்  யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள்  மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கல்முனையில்  ஒன்று கூடிய பொது மக்கள் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் பல்வேறு சுலோகங்களை ஏந்தி   போராட்டத்தில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

அத்துடன், கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில்  இலங்கை மற்றும் பலஸ்தீன கொடிகளை பொதுமக்கள்  பறக்கவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »