வெளிநாட்டில் இருந்தவாறு அவிசாவளை பிரதேசத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 'மன்ன ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரிஜனக அவிசாவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ஜயலத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மன்னா ரமேஷின் தோழர் மகேஷ் தனஞ்சய அண்மையில் ,பொலிஸாரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மன்ன ரமேஷ், தலைமை பிரதான பொலிஸ் பரிசோதகரை தொலைபேசியில் அழைத்து, "எனது பிள்ளை போன்றிருந்த ஒருவனை நீ கொன்றுவிட்டாய் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இதற்கு நீயும் உன் பிள்ளையும் பதில் கூற தயாராக இருங்கள். இருவரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம்" என்று மிரட்டியுள்ளார்.
மன்னா ரமேஷின் பாதாளச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோரை பிரதான பொலிஸ் பரிசோதகர் .பிரசன்ன ஜயலத் ஏற்கனவே கைது செய்துள்ளதுடன், இந்த மரண அச்சுறுத்தல் தொடர்பில் சீதாவக்க பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.