அரசாங்க அதிகாரிகளின் சரியான தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துவதே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்த தருணத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு மற்றும் புதியவர்களை அரசியலுக்கு கொண்டு வரும் ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.