Our Feeds


Saturday, October 7, 2023

Anonymous

தென்பிட்டஹேன பகுதிக்குள் செல்ல அதிரடி தடை l பொலிஸ் பாதுகாப்பு தீவிரம்

 



மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸை பிரதேசத்திற்கு சொந்தமான தென்பிட்டஹேன மலைப் பகுதிக்கு மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


தென்பிட்டஹேன மலைப் பகுதியில் கடந்த 3ம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், மலைப் பகுதியில் வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

விசேட நிபுணர்களின் ஆய்வுக்கு பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தென்பிட்டஹேன மலைப் பகுதியை சூழ கடும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் குறித்த பகுதிக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »