சர்வதேச நாணய நிதியம் சுமார் ரூ.5 ஆயிரத்து 800 கோடியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
உலக வங்கி, சீனா போன்றவற்றிடம் கடனை பெற்று கொண்டது. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வராததால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றி கொள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தானின் இடைக்கால அரசாங்கம் கடன் கேட்டுள்ளது. எனவே பாகிஸ்தானின் பொருளாதார செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்காக சர்வதேச நாணயம் இந்த மாத இறுதியில் ஒரு குழுவை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.