Our Feeds


Friday, October 13, 2023

Anonymous

G.C.E (O/L) முன்னோடி பரீட்சை ஒத்திவைப்பு

 



கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா சார்ந்த பூஜை வழிபாடுகள் இடம்பெறும் வகையில் இந்த வருடம் இம் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெற மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.


குறித்த ஏற்பாடானது நவராத்திரி விழா தமிழ் பாடசாலைகளில் இடம் பெறுவதற்கு ஒரு தடையாகவிருக்கும் என்ற விடயத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் கவனத்திற்கு மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்டது.


இதனால் கல்வி ராஜாங்க அமைச்சர் ஒரு நீண்ட விளக்க கடிதத்தினை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிற்கு அனுப்பி வைத்துள்ளதோடு கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை பிற் போடுமாறு குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இந்த விடயத்தினை அறிந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் உடனடியாக செயற்பட்டு கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பித்து நவம்பர் 4ஆம் திகதி முடிவுறும் வகையில் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »