ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12.11, 12.19, 12.42 ஆகிய நேரங்களில் முறையே 6.1, 5.6, 6.2 என ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் வீட்டைவிட்டு தெருக்களில், சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் கடந்த செப். 4 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னர் இந்தியாவின் தலைநகர் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.