Our Feeds


Tuesday, October 24, 2023

Anonymous

நிரம்பி வழியும் நில்வலா கங்கை – அவதியுறும் மாணவர்கள்

 



நில்வலா கங்கை நிரம்பி வழிவதால், அக்குரஸ்ஸ பகுதியை சுற்றியுள்ள தாழ் நிலங்களும், வீதிகளும் நீரில் மூழ்கியதுடன், பாடசாலை மாணவர்கள் பத்திரமாக பயணிப்பதற்கு தேவையான வசதிகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.


அக்குரஸ்ஸ சியம்பலாகொட வீதியின் பனடுகம பிரதேசத்தில் இரண்டாம் தவணை பரீட்சைக்கு முகம்கொடுத்த மாணவர்கள் குழுவொன்றை இயந்திரப் படகில் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு பத்திரமாக அழைத்து சென்றுள்ளனர்.


வெள்ளம் காரணமாக மாலிம்படை, திஹாகொட, அத்துரலிய உள்ளிட்ட பல பிரதேசங்களின் பயண நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், இன்று (24) சாதகமான காலநிலை நிலவிய போதிலும் வெள்ளம் குறைவடையவில்லை எனவும், அக்குரஸ்ஸவை சுற்றிலும் வெள்ள நிலைமை மாலை வரை நீடித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »