Our Feeds


Thursday, October 12, 2023

News Editor

கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய புதிய செயலி


 இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) அலுவலகம், மக்கள் தங்கள் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய செயலியை WHO அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த ‘WHOeyes’ இலவச கண் பரிசோதனை செயலியானது கண் பராமரிப்பு சேவை வழங்குநர் இல்லாமலேயே தனிநபர்கள் தங்கள் பார்வையை பரிசோதணை செய்ய உதவுகிறது.

பயன்பாட்டைப் பெற கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது https://qrco.de/beBZ3B என்ற விங்க் வழியாக App Store அல்லது Google Play பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »