இஸ்ரேல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நியூயோர்க் நகர மக்கள் கிராண்ட் சென்ட்ரல் நிலையத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற கிராண்ட் சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் முக்கிய வளாகத்தில் நேற்று மாலை கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரத்தில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியதால் உடனடியாக போர் நிறுத்தம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பலரும் இதே கருத்தை வலியுறுத்தும் பதாகைகளை வைத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 200 பேரை நியூயோர்க் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்து ரயில் நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான யூதர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் கிராண்ட் சென்டிரல் ரயில் நிலையத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ஏராளமானோர் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
கடந்த வாரம் வோஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் போராட்டக்காரர்கள், உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்ட நிலையில், அதன் எதிரொலியாக, இன்று சென்டிரல் ரயில் நிலையத்தில் போராட்டம் வெடித்துள்ளது.