நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த ஜனாதிபதி, இரு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த இக்கட்டான தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒரு நேரத்தில் பொதுவான கட்டமைப்பின் கீழ் பணியாற்றுவதற்கான நேரம் பொருத்தமானது என்றும் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் இருந்து நிவாரணம் மற்றும் பதில்களை நாடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
நிதியமைச்சின் கீழ் உள்ள மூன்று உத்தரவுகள் புதன்கிழமை (04) விவாதிக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.