இதன்படி, கோட்டை ரயில் நிலையத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினால், அனைத்து ரயில் சேவைகளும் ரத்தாகியுள்ள பின்னணியில், பயணிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்ற காரணத்தை கருத்திற் கொண்டே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
மருதானை ரயில் நிலையத்தில் வைத்து ரயில் ஊழியர் ஒருவர், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இந்த பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக இன்று மாலை சேவையில் ஈடுபடவிருந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு பின்னர் இயங்கவிருந்த சுமார் 20திற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (