இலங்கையில் பல பகுதிகளில் இன்று இரவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.