Our Feeds


Sunday, October 15, 2023

Anonymous

பாலஸ்தீன் விவகாரத்தில் இஸ்ரேல் எல்லை மீறுகிறது - சீனா அரசு கடும் எச்சரிக்கை.

 



காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்பாதுகாப்பு என்ற நிலைக்கு அப்பால் சென்றுவிட்டது என தெரிவித்துள்ள சீனா காசா மக்களிற்கு எதிரான கூட்டு தண்டனையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இதனை தெரிவித்துள்ளார்.


சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வேளை சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சர்வதேச சமூகத்தின் குரல்களை செவிமடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்


இஸ்ரேலிற்கு எதிராக சீனா வெளியிட்டுள்ள கடுமையான கருத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »