Our Feeds


Sunday, October 15, 2023

SHAHNI RAMEES

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – இந்திய கப்பல் சேவை ரத்து

 

இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று சனிக்கிழமை (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

இந்த நிலையில், நாகை-இலங்கை இடையே சனிக்கிழமை (14) தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை (15) ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

 

போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால்  சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை (16) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »