Our Feeds


Wednesday, October 18, 2023

Anonymous

அமெரிக்கர்கள் யாரும் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் - அமெரிக்கா அறிவிப்பு!

 



இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது மக்களுக்கு அறிவித்துள்ளது.


பலஸ்தீனத்திற்கு அருகில் அமைந்துள்ள லெபனானில் தற்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நேற்று (17) காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »