Our Feeds


Wednesday, October 4, 2023

Anonymous

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஹமட் உவைஸ்

 



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் இன்று பதவி விலகியுள்ளார்.


தனது பதவிக் காலத்தின் கடைசி நாளான இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நேரில் சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

உவைஸ் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் கடமைகள் காரணமாக தனது பதவி விலகல் அறிவிப்பை வழங்கியிருந்தார்.

அமைச்சரின் கோரிக்கையை ஏற்று கடந்த 14 மாதங்களாக மொஹமட் உவைஸ் மொஹமட் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »