வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 58 ஆயிரத்து 770 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.