இஸ்ரேல் மீது போர் தொடுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, வெற்றி இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவ முகாம்களில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்களை ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்களையும் பணயக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ரொக்கெட் தாக்குதலில் நேபாள மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.